கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வீரகேரளம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஏணியை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். பழைய இரும்பு சேகரிப்பு தொழில் செய்யும் இவர்கள் ஏணியை துண்டாக்குவதற்காக இவ்வாறு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 9ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், கோவை வடக்கு மற்றும் பீளமேடு இடையே வந்த அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினிய ஏணி மீது மோதியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் சேதமடைந்த ஏணியை அப்புறப்படுத்திய பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரது உருவம் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரத்தினபுரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), காரமடை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (45) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இவர்களின் உருவம் ஒத்துப்போனது தெரியவந்தது. விசாரணையில், மது பாட்டில்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் இவர்கள், கடந்த 9ஆம் தேதி ஒரு அலுமினிய ஏணியை பழைய இரும்புக் கடையில் விற்க முயன்றதாக தெரியவந்தது.

ஆனால், கடைக்காரர் அதை முழுமையாக வாங்க மறுத்து, துண்டுகளாக வெட்டி வருமாறு கூறியுள்ளார். ஏணியை துண்டாக்குவதற்காக எளிதான வழியைத் தேடிய இவர்கள், தண்டவாளத்தில் வைத்து ரயில் ஏறி அது உடையட்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...