திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், இன்று இந்திரா நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறியதாகவும், பின்னர் மேலும் சிலர் அந்த கும்பலில் இணைந்து ஜெகதீஷை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஜெகதீஷுக்கு உதவ முன்வந்ததை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து, மொத்தம் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெகதீஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...