கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார். வாக்குப்பதிவு 68 சதவீதத்திலிருந்து 85 sadhaveedham ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Coimbatore: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், சமூக அமைப்புகள், NGOக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நேற்று கோவை IMA ஹாலில் நடைபெற்ற சிறப்பு பாராட்டு விழாவில் இந்த கௌரவங்கள் வழங்கப்பட்டன.






100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து, வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்குப்பதிவின் அவசியத்தை எடுத்துரைத்த பல சமூக அமைப்பு பிரதிநிதிகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் Abdul Hakkim (செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் & குணியமுத்தூர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர்), Nisar (செயலாளர், சுப்புலட்சுமி நகர் சங்கம்), Robin (ECM, குணியமுத்தூர் நகர் சங்கம்), Ansari (சாலிடாரிட்டி இளைஞர் அணி), மற்றும் Mohammed Al Faheem (SIO) ஆகியோர் அடங்குவர்.






கடந்த தேர்தலில் கோவை மாவட்ட வாக்குப்பதிவு சுமார் 68 சதவீதம் இருந்த நிலையில், இந்த தேர்தலில் அது 85 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க உயர்விற்கு வீடு வீடாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள், வாக்காளர் பேரணிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் முக்கிய காரணமாக இருந்ததாக அனைவரும் பெருமையுடன் தெரிவித்தனர்.






பல சமூக அமைப்புகள், அரசு ஊழியர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் Pavan Kumar Giriyappanar அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டினார். ஜனநாயக செயல்முறையில் குடியிருப்போர் சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் காட்டிய கூட்டு உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இந்த சாதனை காணப்பட்டது.






நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று, தேர்தல் விழிப்புணர்விற்காக உழைத்த அனைவருக்கும் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. குடியிருப்போர் பகுதிகள் முழுவதும் ஜனநாயக செயல்முறையில் குடிமக்களை தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்ததற்காகவும், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்ப உதவியதற்காகவும் இந்த அமைப்புகள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...