கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி சராசரியாக 7.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விரிவான விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.


பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட விவரப்படி, கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


போத்தனூர் ரயில் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.


இதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...