கேரள போலீசாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளி கோவையில் கைது



பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது இலியாஸ். இவர் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மோசடி வழக்கு உள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில போலீசார் முகம்மது இலியாசை தேடிவந்தனர். ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில், கேரள போலீசார் முகம்மது இலியாசின் புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான விவரங்களை விமான நிலைய இமிகிரேசன் (வெளிநாடு செல்வோர்களை சோதனை செய்யும் பிரிவு) அதிகாரிகளிக்கு கொடுத்தனர்.

அதன் பேரில், இன்று காலை 4.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்ததினர். அப்போது முகம்மது இலியாஸ் திருவனந்தபுரம் போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் போலீசாருக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கேரள போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...