தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்திருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மக்கள் சக்தியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையான SIIR பணியின் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் பரவல், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு எதிரான செயல்கள், கோவில் இடிப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் இந்து முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.

அதேபோல், பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.விற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...