தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்திருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மக்கள் சக்தியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையான SIIR பணியின் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் பரவல், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு எதிரான செயல்கள், கோவில் இடிப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் இந்து முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.

அதேபோல், பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.விற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...