இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சிக்கி சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிங்காநல்லூரை சேர்ந்த அருள்பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் கைதானர்.


Coimbatore: கோவை இருகூர் அருகே செல்போன் பறித்து தப்பிஓட முயன்ற இருவர் வாலிபர்கள், பொதுமக்கள் விரட்டியதில் சிக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோவை இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட ராம்குமார் அவர்களை விரட்டி ஓடினார். அப்போது அந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர். பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக துரத்தி வர, பயந்து ஓடிய இரு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன் (28) என தெரியவந்தது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இருவரையும் முறையாக கைது செய்து, பறிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...