கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டீன் கீதாஞ்சலி இது குறித்து விளக்கினார்.


Coimbatore: கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அழற்சி பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.




கோவையில் ஏப்ரல் 27 நிலவரப்படி அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இம்மாத துவக்கத்தில் இருந்தே வெப்பத்தின் தீவிரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெளியில் அதிக நேரம் செலவிடுவோர் ஹீட் ஸ்ட்ரோக் எனும் வெப்ப அழற்சி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.




திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தல், அதீத தாகம், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், தலைவலிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.




இந்நிலையில், Heat Stroke பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். அவர் மேலும் விளக்குகையில், "அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ORS தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவிலும் 10 லிட்டர் ORS தண்ணீர் வைக்கப்படும்" என்றார்.




"காய்ச்சல் இருந்தால் மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உரிய சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு பழைய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு drops மட்டுமே கொடுக்க வேண்டும். இது அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று டீன் கீதாஞ்சலி வலியுறுத்தினார்.




"சிலர் அடர்த்தி குறைவாக இருக்கும் syrup அளவை மாற்றி drops ஆக கொடுக்கின்றனர். அளவுக்கதிகமான மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியலாம். இதனால் மருந்து கொடுக்கும் போது அளவீட்டை சரிபார்ப்பது மிக அவசியம்" என்று டீன் கீதாஞ்சலி எச்சரித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...