பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.


கோவை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன.



2026 சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...