கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கோவை வளர்ச்சி, தமிழ்நாட்டு உரிமைகள் மற்றும் கூட்டணி வெற்றி குறித்து உரையாற்றினார்.


கோவை: கோவை ராஜவீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், “அம்மன் குளம், கல்லுக்குழி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் மனநிலையும் தேவைகளும் எனக்கு நன்கு தெரியும். இந்த தொகுதியில் நான் நடந்து செல்லாத இடமே இல்லை. செந்தில் பாலாஜியிடம் கூட ‘இது நம் தொகுதி’ என்று கூறியுள்ளேன். எனக்குக் கிடைத்த வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையால் கிடைத்தவை. அதேபோல் இந்த முறை செந்தில் பாலாஜிக்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும்,” என்றார்.



மேலும், “என் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து முதல் திட்டமாக கோவை தெற்கு தொகுதிக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையுடன் எனக்கு நீண்டநாள் உறவு உள்ளது. ஜி.டி. நாயுடு பெயரில் பாலம் அமைக்கப்பட்டது சரியான முடிவு,” என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “தமிழக வளர்ச்சியைப் பற்றிய தரவுகள் வடக்கிலிருந்தே வருகிறது. 15 கட்சிகளை இணைக்கும் திறமை அனைவருக்கும் வராது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரே முதலாளி தான்; அவர் வடக்கில் இருக்கிறார்,” என்றார்.

மேலும், “என் ஊருக்கு ஏன் மெட்ரோ வரவில்லை என்று கேட்கும் புத்திசாலித்தனமான மக்கள் கோவையில் உள்ளனர். பாட்னாவை விட தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை எந்த வகையிலும் குறைவானது இல்லை,” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜியை பாராட்டிய அவர், “100 வார்டுகளில் 96 வார்டுகளை வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அந்த வெற்றி மீண்டும் தொடரும். முதல்வர் அவருக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார். கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது,” என்றார்.

இறுதியாக, “கொங்கு மண்டலம் செழித்தால் தமிழகம் முழுவதும் செழிக்கும். இங்கு வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. உதயசூரியன் உங்கள் சின்னம்,” என்று வாக்கு சேகரித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...