கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கோவை: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பதிவு செய்த Oceans of Knowledge நூல் வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.



இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக டாக்டர் லால் மோகன் பரவலாக அறியப்பட்டவர்.தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் உருவாக்கப்பட்ட Oceans of Knowledge நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.



நூலாசிரியரும், ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் சேர்பர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி, கோவை திருமண்டல துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசியோர், கடல் உயிரியல், கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காக்கும் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் டாக்டர் லால் மோகன் செய்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதன் மூலம் சிறப்பு பெற்றது.

இறுதியாக, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் நன்றி உரையாற்றினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...