தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



அதன்படி, திமுக சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிடும் ஜெயகுமார், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போட்டி என்றும், இதில் தமிழ்நாடு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும், தமிழக மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.5,000 தொகையை வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாகவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முழுமையாக அடிமையாக மாறிவிட்டார் என்றும், “பத்து தோல்வி பழனிச்சாமி” என்று அழைக்கப்படுபவர், இந்த தேர்தலுக்கு பிறகு “மொத்த தோல்வி பழனிச்சாமி” ஆக மாறுவார் என்றும் விமர்சித்தார்.



தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...