கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS இன்று (15.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 117 கவுண்டம்பாளையம், 118 கோயம்புத்தூர் வடக்கு, 121 சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.







கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட G.N.Mills கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு P.S.G. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.






வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் 1, வாக்கு பதிவு அலுவலர் 2 மற்றும் வாக்கு பதிவு அலுவலர் 3 ஆகிய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.






தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்காக தபால் வாக்கு செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் செயல்முறைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






இந்த ஆய்வுகளின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) வினோத்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்/தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதுரா, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் விஜயரங்க பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையர்கள் சண்முகம், நர்மதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...