சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மேள தாள பூஜையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R ஜெயராம் பாரம்பரிய முறையில் சாரட் குதிரை வண்டியில் அமர்ந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். பாப்பநாயக்கன் பாளையம் பகுதிக்குட்பட்ட ஆவாரம்பாளையம், இ.பி காலனி, வி.ஜி. ராவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.




இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் ஜெயராம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்பகுதி மக்கள் மேள தாள முழக்கத்துடன் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாரம்பரிய குதிரை வண்டி பிரசாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.




இந்த வாக்கு சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர்கள் மௌனசாமி, வார்டு செயலாளர்கள் C K D யுவராஜ், சந்தானம், ராஜ்குமார், அரவிந்த், ரமேஷ், ரகுநாத், சால்ட் வெள்ளியங்கிரி, ரகுபதி, சாரமேடு பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களும் பங்கேற்றனர்.






AIADMK கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த வாக்கு சேகரிப்பு பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆதரவு அளித்தனர். பாரம்பரிய சாரட் குதிரை வண்டி பிரசாரம் மூலம் மக்களை நேரடியாக அணுகி தங்களது கருத்துகளை வேட்பாளர் பகிர்ந்து கொண்டார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...