மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

Coimbatore:
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Ycox7etVVUrTY8CyZJnArSfRgHuTT0xC0pgqLijd.jpg

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

TQ1e4gfuf7wKvjl7Yjthen5jfYkJjv3VfAV621MD.jpg
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...