கோவையில் பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் அருகே அமைந்துள்ளது பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பு. முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் தனியார் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து திருப்பூரில் பனியன் ஏற்றுமதி செய்துவரும் சிவானந்த் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டு விட்டிற்கு திரும்பிவந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 28 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு அந்தக் குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...