சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதல்வர் பிறந்தநாள் விழாவுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த இவற்றின் மதிப்பு ரூ.40,000.


Coimbatore: சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 800 சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சார்பில் பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரி தலைமையிலான குழுவினர் இருகூர் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள கலாமணி என்பவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, சுமார் 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு சில்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பாத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் 40,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அண்டாக்களுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியும் பரிசுப் பொருட்களை வழங்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...