திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது

திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையத்தில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகிறது. உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நான்காவதாக மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையம் பகுதியில் இத்திட்டத்தின் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இந்த நிலை தொடர்வதால், அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களை சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்த வலியுறுத்தும் மாநகராட்சி, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...