தீபாவளியை முன்னிட்டு கோவை கடல் கன்னி கண்காட்சி நவம்பர் 3 வரை நீட்டிப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் கடல் கன்னி கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் கடல் கன்னி பொருட்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் உலாவரும் செயற்கை கடல் குகை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு கடல் கன்னிகளின் சாகசங்கள், மீன் உடையுடன் உலாவரும் கடல் கன்னிகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடல் கன்னிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மக்கள் மட்டுமின்றி பெங்களூரு, பாலக்காடு போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.



வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழலும் ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், பனி கூடம் (Snow World), பேய் வீடு, 3D காட்சிகள், பலூன் கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

கண்காட்சி பங்குதாரர் சந்திரசேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அபுதாகிர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மக்களின் விருப்பத்தின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை கடல் கன்னி பொருட்காட்சியுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்," என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...