கோவையில் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். பின்னர் உரிய நபரிடம் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த நிர்மலா (41) என்ற பெண், சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நேர்மையான செயலுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, நிர்மலா தனது தாயார் சாரதாவுடன் பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றபோது, சாலையில் ரூ.50,000 பணக்கட்டு கிடந்ததைக் கண்டார். பணத்தை தேடி யாரும் வராததால், அவர் அந்தப் பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அதே நேரத்தில், பணத்தை இழந்தவரைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செபாஸ்டியன் என்பவர் தான்தான் அந்தப் பணத்தை இழந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினார். இதையடுத்து, நேற்று (அக்டோபர் 15) ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் முன்னிலையில் செபாஸ்டியனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...