கோவை: பொன்னூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை

கோவையில் தொடர் கனமழை காரணமாக, துடியலூர் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியவில்லை.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையில் இருந்து பாயும் பொன்னூத்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையின் விளைவாக, பொன்னூத்து அம்மன் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...