கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்கள் நோய்த் தொற்று அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.



குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனையை தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.



மேலும், பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆங்காங்கே சாக்கடைத்து விடுவாறும் பணி நடைபெற்று வருவதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனாலும் மறுபுறம் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாக்கடை சரிவர தூர்வாரததால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...