கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நம்ம ஊரு சந்தை நடைபெற்றது

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினரால் நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டது. இயற்கை விவசாய பொருட்கள், நெகிழி இல்லாத சூழலில் விற்பனை செய்யப்பட்டன.


Coimbatore: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினர் சார்பில் "நம்ம ஊரு சந்தை" என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெற்றது. இந்த சந்தை பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.



மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...