முரசொலி செல்வம் மறைவு: பல்சமய நல்லுறவு இயக்கம் இரங்கல்

முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான குரலாக விளங்கிய முரசொலி செல்வத்தின் சேவைகளை அவர் பாராட்டியுள்ளார்.


தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவருமான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் குரலாக, சமூக நீதிக்கான குரலாக ஒலித்த முரசொலி செல்வம் அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும். மண்ணில் மறைந்தாலும் மனதில் நிரந்தரமாக வாழும் ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு புகழ் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், "மனித சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்க, சமத்துவம் தழைத்தோங்க களமாடியது திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் சமூக செயல்பாடுகளையும், சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க ஓயாது ஒலிப்பது முரசொலி நாளிதழ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வத்தின் பங்களிப்பை விவரித்த அவர், "சமூக நீதி பத்திரிகையாளராக, திராவிட இயக்க எழுத்தாளராக திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட மகத்தான ஆளுமையாக விளங்கினார். மொழிப்போரில் முன் நின்ற, முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலை சிறந்தவர்களில் ஒருவரான முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், 'சர்க்காரியா கமிஷன் - ஒரு சூழ்ச்சி வலை', 'சில நினைவலைகள்' போன்ற நூல்களை எழுதி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்" என்று பாராட்டியுள்ளார்.

இறுதியாக, "மீளா துரயரில் ஆழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் குடும்பத்தாருக்கும், முரசொலி குழுமத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, கண்ணீருடன் புகழ் அஞ்சலியை காணிக்கையாக்க விளைகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...