திருப்பூரில் மூன்று நாள் கேரம் ரேங்கிங் போட்டிகள்: தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்கு வீரர்கள் தேர்வு

திருப்பூரில் மூன்று நாள் கேரம் ரேங்கிங் போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறுவோர் தேசிய அளவில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாட தேர்வு செய்யப்படுவர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 670 வீரர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் கூலிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் திருப்பூர் கேரம் அசோசியேஷன் சார்பாக கேரம் ரேங்கிங் போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் பிரிவில் 350 பேரும், பெண்கள் பிரிவில் 250 பேரும், இரட்டையர் பிரிவில் சுமார் 70 பேரும் என மொத்தம் 670 பேர் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் சீனியர், பெண்கள் சீனியர், ஆண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.



இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் ஆறு இடங்களைப் பிடிப்பவர்கள் தமிழ்நாடு சார்பாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.



இது தமிழ்நாட்டின் கேரம் வீரர்களுக்கு தேசிய அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இவற்றை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு திருப்பூரில் கேரம் விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...