திருப்பூர் பனியன் நிறுவனங்களில் விமரிசையாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வளாகம் அலங்கரிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழில் நகரமான திருப்பூரில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



ஆயுதபூஜை நாளன்று, நிறுவனங்களின் வாசல்களில் வண்ணக் கோலமிடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பனியன் கம்பெனி வளாகம் முழுவதும் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண காகிதங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வாழைக்கன்று மற்றும் கரும்புகள் நடப்பட்டன. வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டன.

தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பதிவேடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுதல் செய்யப்பட்டது.

பூஜைக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு பொங்கல், சுண்டல், பொறி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...