கோவை திரு.வி.க நகரில் சாலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோவை உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை.



கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நேற்று இரவு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக 14-வது வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ் தலைமையில் வெள்ளக்கிணறு முதல் கணபதி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 14-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, உதவி பொறியாளர் உத்தமன், துடியலூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வேலைகள் செய்து சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...