தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு அன்னூர் மாணவர் தேர்வு: தமிழக அணியில் இடம்பிடித்த ஸ்ரீ ரித்திக்

கோவை அன்னூர் அருகே உள்ள கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் அன்னூர் அருகே கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் ஸ்ரீ ரித்திக், கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் கல்வியாண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வுப் போட்டி அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ ரித்திக், சிறப்பாக விளையாடி தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட உள்ளார்.

தமிழக அணிக்குத் தேர்வு பெற்ற ஸ்ரீ ரித்திக்குக்கு விளையாட்டு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...