கோவை கோட்டைமேடு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: சால்னா கேட்டதற்காக இரண்டு நபர்கள் வன்முறை

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தினர். பலத்த காயமடைந்த அமானுல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அபிதா ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த கரீம் மற்றும் சமீர் ஆகியோர் அபிதா ஹோட்டலுக்கு உணவு உண்ண வந்தனர். அப்போது புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, மீண்டும் வாக்குவாதம் முற்றி, இருவரும் அமானுல்லாவை கடுமையாக தாக்கினர்.



தாக்குதலின் போது அமானுல்லா தள்ளப்பட்டு அருகிலிருந்த போர்டில் விழுந்தார். இதனால் அவரது தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. மேலும், அவரது கண் மற்றும் இடுப்புப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முதலில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அமானுல்லா சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் தினமும் மது போதையில் வரும் நபர்கள் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....