கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு போத்தனூரில் நடைபெற்றது. 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 'மகளிர் மாநாடு' இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



நாட்டில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் அகில இந்திய அளவில் பரப்புரையை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இப்பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில், 'வேலிதாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் தற்கால குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தனது உரையில், "மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "மது, போதை உள்ளிட்ட தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நமது கடமை" என்று வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், முக்கிய ஆளுமைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...