கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு போத்தனூரில் நடைபெற்றது. 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 'மகளிர் மாநாடு' இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



நாட்டில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் அகில இந்திய அளவில் பரப்புரையை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இப்பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில், 'வேலிதாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் தற்கால குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தனது உரையில், "மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "மது, போதை உள்ளிட்ட தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நமது கடமை" என்று வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், முக்கிய ஆளுமைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...