கோவை தியாகி சண்முகா நகரில் குடியிருப்போர் கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக செயலாளர் நா.கார்த்திக்

கோவை தியாகி சண்முகா நகரில் திமுக செயலாளர் நா.கார்த்திக் குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பூங்கா, மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி-2, வார்டு எண் 61, திருச்சி சாலையில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, புதிய பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை குடியிருப்போர் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக நா. கார்த்திக் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, வட்டக்கழக செயலாளர்கள் தென்னவர் செல்வராஜ், அன்பு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹட்கோ ஜெயராமன், வார்டு நிர்வாகிகள் பூங்கொடி, கவியரசு, கலைச்செல்வன், கருணாநிதி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...