கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை பணிகள் தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாயக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் PRG அருண்குமார் MLA முன்னிலையில் தொடங்கியது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கம்பாளையம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



முதல் திட்டத்தின் கீழ், சபரி நகர் முருகன் வீடு முதல் ரங்கசாமி வீடு வரை மற்றும் திரிங்கா நகர் ரங்கராஜ் வீடு முதல் தினகரன் வீடு வரை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இரண்டாவது திட்டத்தின் கீழ், பாலமலை மெயின் ரோடிலிருந்து அசோகன் வீடு வரையில் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.



இந்த இரண்டு திட்டங்களுக்கும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG அருண்குமார் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி, கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...