வால்பாறை: கனமழையில் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அவதி

வால்பாறையில் கனமழை காரணமாக நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு கட்டிடத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கனமழை பெய்து வரும் நிலையில், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, 12வது வார்டுக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் 65க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிந்தாமணி நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பல எஸ்டேட் பகுதிகளில் எஸ்டேட் நிர்வாகத்தின் இடங்களில் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. வால்பாறை, முடிஸ், சோலையார் அணை, ரொட்டிக்கடை போன்ற பகுதிகளில் அரசு கட்டிடங்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குறிப்பாக கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மழைநீர் உள்ளே வடிகிறது. இதனால் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை அரசு கட்டிடத்தில் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...