கோவை மத்திய சிறை இடமாற்றம்: விரிவான திட்ட அறிக்கை தயார் - சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை மத்திய சிறையை பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 95 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.


Coimbatore: கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்யும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு வரும் மத்திய சிறையை இடமாற்றம் செய்துவிட்டு, இந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கரில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் செம்மொழிப் பூங்கா வளாகம் கட்டுமானப் பணி கடந்தாண்டு இறுதியில் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை வளாகத்தின் மற்றொரு பகுதியில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரமடை அருகே பிளிச்சி என்ற பகுதியில் சிறை வளாகம் கட்ட போதிய இடம் இருப்பது கண்டறியப்பட்டு, சிறை வளாகத்துக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை உயரதிகாரிகள் கூறும்போது, "சிறைச்சாலையை ஒட்டிய இடங்களில் அடுத்தடுத்து திட்டப்பணிகள் தொடங்குவதால் சிறைச்சாலையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிளிச்சி பகுதியில் சிறைச் சாலை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 95 ஏக்கர் பரப்பளவில் சிறைக் கட்டிடங்கள் கட்டப்படும்" என்றனர்.

மேலும் அவர்கள், "கைதிகள் தங்குவதற்கான கட்டிடங்கள், அவர்கள் பணிபுரியும் தொழிற்கூட கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு வெளியானதும், கட்டுமானப் பணிக்கு தேவையான தகுந்த நிறுவனம், தொடர்புடைய துறையின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...