அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். மருத்துவத்துறை, இளைஞர்களின் வாழ்க்கை முறை, அரசியல்வாதிகளின் பொறுப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவத்துறை நாட்டில் மிக முக்கியமான துறையாகப் பார்க்கப்படுவதாகக் கூறினார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதாகவும், நவீன மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். மேலும், இந்தியாவில் நோயால் இறப்பவர்களில் 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும் என்றும், மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கைப் பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செல்போன் பயன்பாடு குறித்தும் வெங்கையா நாயுடு எச்சரித்தார். செல்போனை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்றும், குழந்தைகள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அடிமையாகும்போது அவர்களின் வாழ்க்கை பாழாகிறது என்றும் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் போரால் தெற்காசிய நாடுகளில் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் உருவாகியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...