கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் - ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் என்று ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரிகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இதில் 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்தலாம்.

கிழக்கு மண்டலத்தில் குருசாமி நகர், காந்தி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ரவி முருகன் அபார்ட்மெண்ட், பெருமாள் கோவில் வீதி, மருதகோனார் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, தேவாங்க நகர், ஓணாப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.

வடக்கு மண்டலத்தில் மணியகாரம்பாளையம், காமதேனு நகர் ஆகிய இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் கோனவாய்க்கால்பாளையம், ஹவுசிங் யூனிட் பேஸ்-1, சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் நாராயணசாமி லே-அவுட், எம்.என்.ஜி.வீதி, 80 அடி சாலை, கெம்பட்டி காலனி ஆகிய இடங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) இந்த சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். வழக்கமான வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துமாறு ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...