கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் - ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் என்று ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரிகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இதில் 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்தலாம்.

கிழக்கு மண்டலத்தில் குருசாமி நகர், காந்தி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ரவி முருகன் அபார்ட்மெண்ட், பெருமாள் கோவில் வீதி, மருதகோனார் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, தேவாங்க நகர், ஓணாப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.

வடக்கு மண்டலத்தில் மணியகாரம்பாளையம், காமதேனு நகர் ஆகிய இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் கோனவாய்க்கால்பாளையம், ஹவுசிங் யூனிட் பேஸ்-1, சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் நாராயணசாமி லே-அவுட், எம்.என்.ஜி.வீதி, 80 அடி சாலை, கெம்பட்டி காலனி ஆகிய இடங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) இந்த சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். வழக்கமான வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துமாறு ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...