காந்தி ஜெயந்தி: கோட்டை மருதூரில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோட்டை மருதூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வடிவு சிவசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.



இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கினர்.



இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...