உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு: பென்ஷன் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

உடுமலையில் நடைபெற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், பென்ஷன் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.



மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கியது.



மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாஸ்கரன், பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.3000 வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன், தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ், மகளிர் அமைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...