விபத்துக்களுக்கு வழி வகுக்கிறதா ‘பஸ்-பே?

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 இடங்களை தேர்வு செய்து போலீசார் அங்கு ‘பஸ்-பே’ அமைத்தனர். நகர பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், ‘பஸ்-பே’க்களால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நகர பேருந்துகள் திடீரென இடதுபுறம் இருக்கும் ‘பஸ்-பே’ நோக்கி திரும்பும் போது பேருந்தின் பின்புறம் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பஸ்-பே’வில் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அமைக்கப்பட ‘பஸ்-பே’க்களால் தற்போது சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்கள் அல்லது, வாகனத்தில் கீறல் மட்டும் ஏற்படுவதால் புகார்களை அளிக்க தயங்கி வருகின்றனர். 

இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை கொண்டுவர வேண்டும். ‘பஸ்-பே’ தொடங்குவதற்கு முன் சற்று தொலைவில் இருந்து பேருந்துகள் மட்டும் செல்லுமாறு சிறிய கற்களை வைத்து பாதை அமைத்தால் இந்த விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...