காந்தி ஜெயந்தி: கோவையில் நாளை இறைச்சிக் கடைகள் மூடல் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று கோவை மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுவைக்கூடங்கள் மூடப்படும். மீறினால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2, 2024 அன்று மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவைக்கூடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார். இதில் அபராதம் விதித்தல், முதல் எச்சரிக்கை வழங்குதல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று விலங்குகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...