கோவையில் நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் செப்டம்பர் 30 அன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார். நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் செப்டம்பர் 30 அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பொருட்களை ஆணையாளர் பார்வையிட்டார். DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.



48வது வார்டில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைப்பு பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணி 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.



அதே பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



68வது வார்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நடராஜன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...