கோவை கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கொண்டாடிய திமுகவினர்

கோவை கூடலூர் வீரபாண்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் கொண்டாடினர். நகர திமுக சார்பில் நகர செயலாளர் அறிவரசு தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியின் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அப்பகுதி மக்கள், பேருந்து பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகரமன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், அகில் சந்திரசேகர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர், ஐ.டி.விங் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...