மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் ஆண்டு BMKC கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை இலுப்பம்பாளையம் கிராமத்தில் BMKC என்ற கபடி குழுவினர் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் பகல் இரவு நடைபெற்ற இந்த கபடி போட்டியில், இறுதிப் போட்டிக்கு சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கபடி அணியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.கே.சி அணியும் தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங்காபுரம் கபடி அணியினர், ஈரோடு அணியை 46-28 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் பரிசை வென்றனர். முதல் பரிசு பெற்ற லிங்கபுரம் அணிக்கு ரூ.30,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.20,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தை சேலத்தின் சாமி அகாடமி அணியும், நான்காவது இடத்தை கே.சி.கே கனுவாய் அணியும் பெற்றன. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...