சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் சாலையில் நடந்து வந்த காட்டு யானை பாகுபலி: சுதாரித்து செயல்பட்ட பொதுமக்கள்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி என்ற காட்டு யானை சாலையில் நடந்து வந்தது. பொதுமக்கள் சுதாரித்து செயல்பட்டு, வாகனங்களை நிறுத்தி, யானையை பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை பொதுவாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பாகுபலி யானை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சிறுமுகையில் இருந்து லிங்கபுரம் செல்லும் பிரதான சாலையில் லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி யானை தனியாக நடந்து வருவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டுள்ளனர்.



யானை நடமாடுவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, செல்போன் மூலம் தகவல் பரிமாறி, எதிரெதிரே வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லி போக்குவரத்தை தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து, காட்டு யானை சாலையில் அமைதியாக நடந்து வந்து, தனது வழக்கமான வலசை பாதையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பகுதியில் நுழைந்து ஆடர் வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் சுயாதீனமான செயல்பாட்டால், யானை வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் பரிமாறியதால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்க உதவும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...