அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவரும் கல்வியாளருமான கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார்.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.



பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் (திட்டங்கள்) அரவிந்த், மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை செய்துள்ள சாதனைகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தனது உரையில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ தர்மத்தோடு செயல்படுவதாகவும், அரவிந்த் கண் மருத்துவமனை போன்று சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அரசுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுவதாகவும் கூறினார்.



மேலும் அவர், தமிழக முதல்வர் கோவையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னைக்கு இணையாக கோவை முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். "நியூயார்க்கையும் வாஷிங்டனையும் போன்று கோவையும் சென்னையும் வரப்போகிறது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...