கோவையில் கோழி கடை ஊழியர் பூரிக் கட்டையால் அடித்துக் கொலை - மனைவி கைது

கோவையில், கோழி கடை ஊழியர் நந்தகுமார் தனது மனைவி சஹானா பேகத்தால் பூரிக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக நடந்த இச்சம்பவத்தில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா எஸ்.மேட்டுப்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜனின் மகன் நந்தகுமார், மதுக்கரையைச் சேர்ந்த சஹானா பேகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நந்தகுமார் இடிகரை ராமானுஜம் நகரில் குடியிருந்து கொண்டு மணிகாரம் பாளையத்தில் உள்ள ஒரு கோழி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

கடந்த 25 ஆம் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சஹானா பேகம், வீட்டில் இருந்த பூரிக் கட்டையால் நந்தகுமாரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. கோபமடைந்த நந்தகுமார் தன் மகனை அழைத்துக் கொண்டு கோழி கடைக்குச் சென்று அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் கோழிக்கடை உரிமையாளர் பிரகாஷ் வந்து நந்தகுமாரை எழுப்பியபோது, அவர் மயங்கிய நிலையில் இருந்தார். சந்தேகம் அடைந்த அவர் மருத்துவ உதவியை நாடினார். மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

பின்னர், நந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கிணத்துக்கடவு எஸ்.மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றபோது, அவரது தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் தலையில் அடிபட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.



இதனையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, நந்தகுமாரின் மனைவி சஹானா பேகத்தைக் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...