திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 52 பயணிகள் உயிர் தப்பினர்

தாராபுரம் அருகே திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 52 பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நள்ளிரவு ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே தீப்பிடித்தது.

பேருந்தின் ஓட்டுனர் கணேசமூர்த்தி (வயது 55) சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக அனைத்து பயணிகளிடமும் தீப்பிடித்த விவரத்தைத் தெரிவித்தார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோது, இடப்பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன், மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பேருந்து தீ விபத்து சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....