முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடினர். உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஜாமீனை வழங்கியது.



Coimbatore: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கோவையில் திமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள், பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



இந்த கொண்டாட்டங்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை திமுகவினர் பெரும் வெற்றியாக கருதி இவ்வாறு கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...