குருவின் பிறந்த நாளில் மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி: வானதி சீனிவாசன் எம்எல்ஏ நினைவஞ்சலி

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப் படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்தார். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். தடைக்கு எதிராக மதுரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறு வயதிலேயே கைது செய்யப்பட்டார்.

பண்டித் தீன்தயாள் உபாத்தியாய மறைவுக்குப் பின் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று ஜன சங்கத்தின் முழுநேர ஊழியரானார். கச்சத் தீவு விவகாரத்தில் இந்திரா காந்தியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எமர்ஜென்சி காலத்திலும், 1977 தேர்தலிலும் முக்கிய பங்காற்றினார்.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கொள்கைக்காக வாழ்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, தனது அரசியல் குரு பண்டித் தீந்தயாள் உபாத்தியாயவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்றே மறைந்தார்.

காமராஜருக்குப் பின் தேசியக் கட்சி ஒன்றின் தேசியத் தலைவரான தமிழர் என்ற பெருமையை பெற்ற ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...