உலக மருந்தாளுநர்கள் தினம்: கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "மருந்தாளுநர்கள்: உலகளாவிய சுகாதாரத் தேவைகளை சந்தித்தல்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த பேரணிக்கு எஸ்.என்.எஸ் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் (IPA) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



பேரணியில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்தாளுநரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவர்கள் பேரணியின் போது ஏந்தி சென்றனர்.

இந்த பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் அருகே 2.5 கிலோமீட்டர் தொலைவு வரை தொடங்கி முடிந்தது. மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...